அரசியல்உலகம்குற்றம்

“கரூர் அரசியல் பிரச்சாரம்” என்னும் (தவெக) அரசியல் படுகொலைகள்?

அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

ft”கரூர் அரசியல் பிரச்சாரம்” என்னும் (தவெக) அரசியல் படுகொலைகள்?

28/09/2025 – ஞாயிற்றுக்கிழமை

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் – என்பதற்கு ஏராளமான சம்பவங்கள் இருந்தாலும் கரூர் சம்பவம் மனிதநேயமிக்க மானுட சமூகத்தின் ஈரக்குலையை நடுங்கச் செய்கிறது 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி கட்சி நடத்தும் அனைத்துக் கட்சிகளும் அவரவர் நிலையில் இருந்து – அறிவார்ந்த விஷயத்தை தாண்டி, தங்கள் நலனில் இருந்து கரூர் படுகொலை சம்பவத்தில் கருத்துக்களையும் விமர்சனங்களையும் உமிழ்த்து கொண்டிருக்கிறார்கள்.

அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதே,

மருத்துவத்துறை :-                ——————————இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜகுமாரி கரூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் உயிரிழிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார்.

உயிரிழப்புகளுக்குக் காரணம் என்ன?

“கரூர் வேலுசாமிபுரம் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. உடற்கூராய்வு அறிக்கையில், பெரும்பாலானவர்கள் இறப்பிற்குக் காரணம் மூச்சுத்திணறல் (Asphyxia) என உறுதியாகி உள்ளது.”

கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேரின் நிலைமை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்.”

மருத்துவ சிகிச்சை விவரம்

“உடற்கூறு ஆய்வுக்காக மட்டும் 16 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 60 முதல் 70 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதவிர சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.”

கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை:-.                           ———————–.                  மிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்ற கரூர் பேரணியில், சனிக்கிழமை மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர், கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர் என்ற குற்றச்சாட்டுகளை தமிழக காவல்துறை நிராகரித்துள்ளது.

500 காவல் துறையினரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சட்டம் மற்றும் ஒழுங்கு துணைத் தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். “கரூர் நிகழ்வு அதிக ஆபத்து நிறைந்ததாக வகைப்படுத்தப்பட்டது. 50 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதத்தில் 500 பணியாளர்களை நியமித்தோம், 25,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம் – இது ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட 2.5 மடங்கு அதிகம். இறுதியில், கிட்டத்தட்ட 27,000 பேர் வந்திருந்தனர்,” என்று அவர் கூறினார்.

விஜய்யின் அரசியல் நிகழ்வுகளில் போதுமான பாதுகாப்புப் பணியை மாநில காவல்துறை தொடர்ந்து உறுதி செய்து வந்ததை அடிக்கோடிட்டுக் காட்ட சமீபத்திய உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டினார்: திருச்சியில் 650 பேர், அரியலூரில் 287 பேர், பெரம்பலூரில் 480 பேர், நாகப்பட்டினத்தில் 410 பேர், திருவாரூரில் 413 பேர் மற்றும் நாமக்கலில் 279 பேர் – இங்கு, 34 பேர் வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

ஒரு ஒப்பீட்டை எடுத்துக்கொண்டு, அதிமுக தலைவரும், லோக்சபா தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேரணியில், “அது ஒரு ஒழுங்கான கூட்டம்” என்பதால், 137 போலீசார் மட்டுமே நிறுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், விஜய்யின் பிரச்சாரத்தின் போது, ​​நிலைமை குழப்பமாக மாறியது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “நேற்று கூட்டத்தின் வழியாக காயமடைந்தவர்களை நகர்த்தக்கூட முடியவில்லை. விஜய்யை கூட வெளியே அழைத்துச் செல்ல முடியவில்லை,” என்று தேவாசீர்வாதம் கூறினார்.

ஆம்புலன்ஸ்கள் குறித்த பழனிசாமியின் சந்தேகங்களுக்கு, ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின்படி, டிவிகே இரண்டு ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்ததாக அதிகாரி தெளிவுபடுத்தினார். “நெரிசலை அடுத்து, உள்ளூர் காவல் நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர், மேலும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து கிட்டத்தட்ட 10 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன,” என்று அவர் கூறினார். கல் வீச்சு பற்றிய செய்திகளையும் அவர் நிராகரித்தார்.

பிரச்சனை எப்படி தொடங்கியது?

குழப்பம் தாமதங்கள் மற்றும் கூட்டத்தின் அமைதியின்மையால் ஏற்பட்டதாக தேவசிர்வாதம் விளக்கினார். மதியம் 12 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த விஜயின் நாமக்கல் பிரச்சாரம் நான்கு மணி நேரம் தாமதமானது. நடிகர்-அரசியல்வாதி இறுதியாக மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு கரூரில் நுழைந்து, தனது பிரச்சார வேனில் ஏறினார்.

“அவரைப் பார்க்க மக்களிடையே ஒரு பெரிய ஆர்வம் இருந்தது. கூட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்தது. டிவிகே அமைப்பாளர்கள் விஜயின் உரையை ஏற்கவில்லை, நியமிக்கப்பட்ட இடத்திற்கு 50 மீட்டர் முன்னால் அவரது வாகனத்தை நிறுத்தினர். வந்த பிறகு 10 நிமிடங்கள், யாரும் அவரைப் பார்க்க முடியவில்லை. கூட்டம் அமைதியற்றதாக மாறியது, மேலும் திடீர் அலை அலையானது,” என்று அவர் கூறினார்.

காலை 11:00 மணிக்குள் பல ஆதரவாளர்கள் வந்து, உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருந்தனர், இது நிலைமையை மோசமாக்கியிருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார். “கூட்டத்தின் ஓரங்களில் ஒரு சம்பவம் நடந்தது, அதை நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

மின்சாரத்துறை:-

——————————.                     மின்வெட்டு திருப்பம்தவறான நிர்வாகக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பேரணியின் போது கரூரில் தடையற்ற மின்சாரம் பராமரிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின்சாரத் துறை தெளிவுபடுத்தியது. 

“தவெக”தலைவர் விஜய் :-

————————————————

கரூர் வேலுசாமிபுரத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கிய “தவெக” தலைவர் விஜய், கூடி இருந்த கூட்டத்தை பார்த்து சொன்னது – தமிழ்நாடு காவல்துறை பைபாஸ் ரோட்டில் இருந்து என்னை தங்கள் முன்னே பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள், ஆகவே தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி என தெரிவித்தார், இது சம்பவத்தின் வீரியத்தை தெரிவிக்கிறது  

ஒரு பக்கம் மின்சாரம் கட்டு என TVK சொல்லி இருப்பினும், சொந்தமாக ஜெனரேட்டர்கள் மற்றும் ஃபோகஸ் லைட்களை ஏற்பாடு செய்திருந்த டிவிகே அமைப்பாளர்கள், கூட்டம் அதிகரித்ததால் ஒரு தடங்கலைக் கண்டனர்.

கட்சியால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாக காவல்துறை கூறினாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், கூட்டம் சீராகக் கலைவதை உறுதி செய்யவும் அவர்கள் தவறிவிட்டதாக டிவிகே குற்றம் சாட்டியுள்ளது, இதுவே கூட்ட நெரிசலுக்கான மூல காரணம் என்று கூறியுள்ளது. ஆளும் திமுகவின் “குற்றவியல் சதி” என்று குற்றம் சாட்டி, சுயாதீன விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது, இந்தக் குற்றச்சாட்டை திராவிடக் கட்சி கடுமையாக மறுத்துள்ளது.

காவல்துறை விளக்கம் :-

——————————————-

பொதுக் கூட்டமோ பிரச்சாரமோ நடத்த 

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் அனுமதி கேட்டதாக இன்பதுரை எம்.பி சொன்ன பொய் ! கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது. ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?’ என்று அதிமுக எம்.பி இன்பதுரை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். 

முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டதாக காண்பிக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் இடம் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா. தவெக தரப்பில் அனுமதி கேட்டது லைட் ஹவுஸ் ரவுண்டானா, பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இரண்டும் வெவ்வேறு பகுதி. 

பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் கேட்டுக் கொள்ளும் காவல்துறை

படம் 1 : தவெக அனுமதி வேண்டிய கடிதத்தில் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

படம் 2 : பேருந்து நிலைய ரவுண்டானா மற்றும் லைட் ஹவுஸ் ரவுண்டானா வேறு வேறு என்பதை வரைபடம் மூலம் காணலாம். 

படம் 3 : முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டது கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா என காவல் துறை விளக்கம் அளித்தது உள்ளது

தவெகவின் கரூர் பிரச்சாரத்தில் நடந்தது என்ன? – நேரில் பார்த்தவர்கள் பகீர் தகவல்

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ள நிலையில், அன்றைய தினம் நடந்தவை குறித்து நேரில் பார்த்தவர்கள் விவரித்தவை…

உயிரிழந்த கிருத்திக் உடன்பிறவா சகோதரர் சஞ்சய் (18): ‘நான், எனது சித்தி சந்திரகலா, அவரது மகன் கிருத்திக் அனைவரும் விஜயின் தீவிர ரசிகர்கள். விஜயை பார்க்க வேண்டும் என்பதற்காக தான் கூட்டத்துக்கு போயிருந்தோம். கூட்ட நெரிசலில் நான், எனது சித்தி, கிருத்திக் ஆகியோர் சிக்கிக் கொண்டோம்.

ஒருவழியாக நாங்கள் இருவரும் உயிர் தப்பினோம். ஆனால் கிருத்திக் மூச்சுத் திணறி இறந்துவிட்டார். அவரது மரணத்துக்கு காரணம் காவல் துறைதான். 500 போலீஸார் பாதுகாப்பு என்றார்கள். 50 போலீஸார் கூட அங்கு இல்லை. போலீஸார் இருந்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்.’

உயிரிழந்த ஸ்ரீநாத் வகுப்புத் தோழன் பூபாலன்: ‘நாங்கள் கரூர் சேரன் பள்ளியில் படித்து வந்தோம். நேற்று முன்தினம் நாங்கள் அனைவரும் தடகள போட்டிக்கு தயார் செய்வதற்காக அகாடமி சென்று விட்டோம். ஸ்ரீநாத் விஜயின் தீவிர ரசிகர். அதனால் விஜயை பார்க்க சென்றிருக்கிறார். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். இது குறித்த தகவல் எங்களுக்கு சற்றுமுன் தான் கிடைத்தது. அதனால் ஸ்ரீநாத்தின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கலாம் என்பதற்காக நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்தோம். ஆனால், அவரது சடலத்தை தான் பார்க்க முடிந்தது.’

வேலுசாமிபுரம் சுப்பிரமணி (டீ வியாபாரி) – ‘கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தின்போது அங்கிருந்த இளைஞர்கள் வேப்ப மரத்தில் ஏறினர். மரம் உடைந்து சாக்கடையில் விழுந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் சாக்கடையில் விழுந்தவர்களை மிதித்து கொண்டு ஓடினர். இதனால் பலரும் மேலே வரமுடியாமல் சாக்கடையில் சிக்கி உயிரிழந்தனர்.’

வேலுசாமிபுரம் சாந்தி: ‘இங்கு காலையில் இருந்தே கூட்டம் அதிகமிருந்தது. 10 மணிக்குப் பிறகு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. குழந்தைகளுடன் வந்த சிலரை கண்டித்தபோது, அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை. விஜய் வந்து பேசத் தொடங்கியவுடன் அங்கிருந்த கூரை மீது 10-க்கும் மேற்பட்டோர் ஏறினர். சிறிது நேரத்தில் அவர்கள் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்து சிலர் உயிரிழந்தனர்.’

பாலாஜி: ‘சம்பவ இடத்தில் காலை முதலே கூட்டம் கூட தொடங்கியது. விஜய்யின் வாகனம் நெருங்க நெருங்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. பிரச்சாரத்துக்கு விஜய் 3 மணி அளவில் வந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.’

பிரபாகரன்: ‘நகருக்கு வெளிப்புறத்தில் பெரிய இடத்தில் கூட்டத்துக்கு அனுமதி தந்திருக்க வேண்டும். கூட்டம் அதிகம் இருந்ததால் விஜய்யின் வாகனம் கரூர் பைபாஸ் சாலையையும் அடைய முடியவில்லை. அதனால், அவரது வாகனம் ஊருக்கு உள்ளே வர வேண்டியதானது. அவரது வாகனத்தோடு சேர்ந்து ஒரு கூட்டம் உள்ளே வந்தது. அதே நேரத்தில் மேற்கு பக்கத்தில் இருந்தும் கூட்டம் அதிகம் வந்திருந்தது. நிச்சயம் ஊருக்கு வெளியில் நடந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது.

விஜய்யை பார்க்க வேண்டுமென குழந்தைகள் விரும்புகிறார்கள். நம் ஊர் பக்கம் வருவதால் குழந்தைகளுக்கு காட்டி விட்டு செல்லலாம் என நானும் வந்தேன். களத்தில் காவலர்களும் இருந்தனர். ஆனால், அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. விஜய் இங்கிருந்து சென்ற பிறகுதான் நடந்த சம்பவமே தெரிய வந்தது.’

கவிதா, காமாட்சி: ‘கூட்டம் அதிகம் இருந்தது. விஜய் வருவதற்கு சரியாக அரை மணி நேரத்துக்கு முன்பாக கூட்டம் அதிகமானது. விஜய் வந்ததும் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பல பேர் இடமில்லாமல் தோட்டத்துக்குள் சென்று மயங்கிய நிலையில் படுத்திருந்தனர். யாருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் பலர் மயக்கமடைந்தனர்.’

தவெக நிர்வாகிகளின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் நெரிசலில் சிக்கி போராடிய 111 உயிர்களை காப்பாற்றினோம்: ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பேட்டி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தைகள், பெண்கள் உள்பட 111 பேரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

அப்போது தவெகவினர் நடத்திய தாக்குதலில் 2 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைந்தது. ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கினர். கரூர் பகுதியில் தவெக நடத்திய பரப்புரை கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் 20 நிபந்தனைகள் வழங்கப்பட்டது. அதில் முக்கியமாக கூட்டம் நடக்கும் பகுதியில் கட்டாயம் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்படி கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கரூரில் கூட்டம் நடந்த பகுதியில் தயாராக 2 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.

தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடக்கும் பகுதியில் 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.40 மணிக்கு தான் வந்தார். இதனால் 10 ஆயிரம் பேர் வரகூடிய இடத்திற்கு 27 ஆயிரம் பேர் கூடினர். விஜய் வருவதற்கு தாமதம் ஆனதால் வெகு நேரம் தண்ணீர் இன்றி கால்கடுக்க நின்று இருந்த இளம் பெண்கள் சிலர் கூட்டத்தின் இடையே மயங்கி விழுந்தனர். இதனால் அருகில் இருந்தவர்கள் அவசர உதவி எண் மூலம் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அதேநேரம் கூட்டத்தில் ஏற்கனவே தயாராக தவெக கொடி கட்டி நிறுத்தி வைத்திருந்த ஆம்புலன்ஸ் மயங்கி விழுந்த பெண்ணை மீட்க விஜய் பேசி கொண்டிருந்த போது கூட்டத்திற்குள் வந்தது.

அப்போது பிரசார வாகனத்தின் மீது பேசி கொண்டிருந்த விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை கவனத்தில் கொண்டு, தங்களது கட்சியினர் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் என்றும் கூட தெரியாமல், கூட்டத்திற்குள் நுழைந்த ஆம்புலன்சை பார்த்து, எனது கட்சி கொடி கட்டி ஆம்புலன்ஸ் வருகிறது, அதை பாருங்கள் என்று கிண்டலாக கூறினார். அதை பார்த்த தொண்டர்கள் ஆவேசப்பட்டு ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்க முயன்றனர். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் நமது நிர்வாகிகள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் தான் என்று கூறினர்.

அடுத்த சில நொடிகளில் மரத்தின் மீது அமர்ந்து இருந்த தொண்டர்களின் பாரம் தாங்காமல் மரக்கிளை முறிந்து ஜெனரேட்டர் கொட்டகையின் மீது விழுந்தது. அப்போது மரத்தின் அருகில் நின்றிருந்த பொதுமக்கள் மீது தொண்டர்கள் விழுந்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் மக்கள் இடுபாடுகளில் சிக்கி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். சிலர் மயங்கியவர்களை மீட்க கீழே குனிந்த போது, அவர்கள் மீதும் பின்னால் நின்று இருந்த கூட்டம் ஒரே நேரத்தில் ஓடியதால் அவர்களும் சிக்கி மூச்சு திணறி உயிருக்கு போராடினர்.

இந்த நேரத்தில் கரூர் டிஎஸ்பி ஒருவர் அமராவதி மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ஆம்புலன்சை உடனே பொதுமக்களை மீட்க வரவழைத்தார். அவர்களும் வேகமாக வந்தனர். ஆனால் தவெகவினர் ஆம்புலன்ஸை மீட்க விடாமல் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தவெகவினரிடம் நிலைமையை கூறி அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருந்தாலும் தலைவர் விஜய் கூறியதால் அவர்கள் ஆம்புலன்ஸை உள்ளே விடாமல் வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டதால் 2 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கினர். அப்படி இருந்தும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தவெகவினரின் தாக்குதலை பொருப்படுத்தாமல் மயங்கி உயிர்களை மீட்க வாகனத்ைத சாதுரியமாக இயக்கி பாதிக்கப்பட்டவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளான அமராவதி, அப்போலோ, செந்தில் கேர் மற்றும் கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடுமையாக போராடியும் அன்று இரவு 38 பேர் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் 111 பேரை உயிருடன் மீட்டனர். கரூர் கூட்ட நெரிசலில் மீட்பு பணியில் ஈடுபட்ட  முருகன் ஆம்புலன்ஸ் சர்வீஸ் உரிமையாளர் சதீஷ்குமார் கூறியதாவது: எனக்கு இரவு 7.45 மணிக்கு அழைப்பு வந்தது. நான் செல்லும் போது சக ஆம்புலன்ஸ் ஒன்றை கருப்பு கலர் காரில் தவெக கொடி கட்டிய 6 பேர் வழிமறித்து, ஒன்றும் இல்லை எதற்கு காலியான ஆம்புலன்சை கூட்டம் நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறாய் என்று கேட்டு தாக்குதல் நடத்தினர். அதில் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. சிறிய ஆம்னி ஆம்புலன்சுகளை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அமராவதி மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து மீண்டும் பெரிய ஆம்புலன்ஸ் உதவியுடன் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நான் 3 பேரை மீட்டேன்.

கரூர் பகுதியில் வேலை செய்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தான் சம்பளம் கொடுப்பார்கள். சம்பள நாள் என்பதால் அனைவரும் சம்பளம் வாங்கி கொண்டு விஜயை பார்த்துவிட்டு போய் விடலாம் என்ற நோக்கில் அதிகளவில் கூடிவிட்டனர். நடிகர் விஜய் அவர்கள் கூறியபடி மாலை 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து இருந்தால் இவ்வளவு கூட்டமும் இருந்து இருக்காது, இப்படி ஒரு பெரும் உயிர்சேதமும் நடந்து இருக்காது என்றார்.

மீட்பு பணியில் ஈடுபட்ட தீரன் கொங்கு ஆம்புலன்ஸ் டிரைவர் பிரகாஷ் கூறியதாவது: எனது செல்போனுக்கு இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை தொடர்ந்து அழைப்புகள் வந்தது. அதில் பேசிய நபர், கரூர் கூட்டத்தில் பெண் ஒருவர் மயங்கிவிட்டார். அவரை மீட்க வாருங்கள் என்று கூறினர். நான் விரைந்து வந்தேன். அப்போது ஒரு பகுதியில் தவெகவினர் வாகனத்தை உள்ளே விடவில்லை. இருந்தாலும் நான் அதிவேகமாக கூட்டத்திற்குள் சென்று ஒரு குழந்தை உட்பட 3 பேரை மீட்டு அருகில் உள்ள அமராவதி மருத்துவமனையில் அனுமதித்தேன். என் வாழ்நாளில் இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்தது இல்லை. எனது நண்பர் மற்றொரு ஆம்புலன்சில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டார். இனி இதுபோன்ற சம்பவம் எதிராளிக்கும் நடக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

மீட்பு பணியில் ஈடுபட்ட தாரணி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜய் கூறியதாவது: நான் 20 முதல் 25 பேர் வரை மருத்துவமனையில் சேர்த்தேன். அதிகளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குன்னம் சத்திலிருந்து மேலும் 2 ஆம்புலன்ஸ் நான் வரவழைத்து, கிட்டத்தட்ட 65 பேரை நாங்கள் காப்பாற்றினோம். ஆனால் எனது ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், அப்போலோ மருத்துவமனையில் 2 குழந்தைகள், 8 வயது சிறுவன், 20 வயது இளம் பெண் மற்றும் அமராவதி மருத்துவமனையில் 2 பெண்கள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மறுநாள் முழுவதும் இறப்பு சம்பவத்தை நினைத்து என்னால் சாப்பிட கூட முடியவில்லை.

மீட்பு பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் லோகேஷ் கூறியதாவது: பாதிக்கப்பட்டவர்களில் 2 பேரை எனது ஆம்புலன்சில் ஏற்றி அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றதால், செந்தில் கேர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தேன். ஒரு மணி நேரத்தில் எங்களது ஆம்புலன்ஸ் குழு 60 பேர் வரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தோம். இவ்வளவு கஷ்டப்பட்டும் எனது ஆம்புலன்சில் 1 குழந்தை, ஆண் உட்பட 2 பேர் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்றார்

தகவலறிந்து உடனடியாக கரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினார். பல அரசியல் கட்சி தலைவர்களும் களத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்,

துணை முதல்வர் உதயநிதி துபாயில் இருந்து பாதியிலேயே வந்து கரூர் சூழல்களை கவனித்தார். அதேபோல அமைச்சர்கள் கரூரில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

அதே சமயம் விஜய் உடனடியாக திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். சில மணி நேரம் கழித்தே அவரிடம் இருந்து இரங்கல் செய்தி வந்தது. இந்த சூழலில் கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுக சதி செய்திருப்பதாகவும், செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும், கரூர் சோகம் தொடர்பாக பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“அதிக கூட்டம்.! “4 மணி நேரம் வேண்டுமென்றே தாமதமாக வந்த விஜய்”. தாகத்திலும் வெயிலிலும் பரிதவித்த மக்கள். FIR-ல் பரபரப்பு தகவல்”

41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் ஆகியோர் மீது 05 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, விஜய் கரூருக்கு வருவதை 04 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் விளைவாக அதிக கூட்டம் காரணமாக மிதிபடுதல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பாக கரூர் நகர காவல் நிலையம் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) கூறியுள்ளதாவது:

‘கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளராகிய மணிவண்ணன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விவரம் பின்வருமாறு:

தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்டம் செயலாளர் மதியழகன் அவரது கட்சியின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27ம் தேதி கரூர் நகர உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர் 26ம் தேதி செயல்முறை ஆணையின்படி 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு 27ம் தேதி கனம் காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் மற்றும் கரூர் மாவட்டம் எஸ்பி மேற்பார்வையில் கூடுதல் எஸ்பி, துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், ஊர்க்காவல்படையை சேர்ந்த 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டு கரூர் நகர மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காலை 9மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மதியம் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 10 மணியில் இருந்தே பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் பெருமளவில் வர தொடங்கினார்கள். இதனால் வேலுச்சாமிபுரம் மெயின் ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோயில் ஜங்சன், கோவை சாலை, திருக்காம்புலியூர் ரவுண்டானா, மதுரை, சேலம் பைபாஸ் சாலை ஆகிய இங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள்.

கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10 ஆயிரம் தொண்டர்கள் தான் வருவார்கள் என்று எழுதி கொடுத்துள்ளார். ஆனால் பிரசார கூட்டத்திற்கு சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர்.

இந்நிலையில் மாலை 4.45 மணிக்கு தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோ, பல்வேறு இடங்களில் நிபந்தனைகளை மீறியும் வரவேற்புகள் நடத்தியும் காலதாமதம் செய்து மாலை 6 மணிக்கு முனியப்பன் கோயில் ஜங்சனில் ராங் ரூட்டில் அதாவது ரோட்டின் வலது புறம் கட்சியின் தலைவர் விஜய் வாகனங்களை அழைத்து சென்று மாலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களில் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், அதே இடத்தில் அளவுக்கு அதிகமாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தனர்.

இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவ்லதுறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோத செய்து மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனிடமும் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிமுடம் நானும் காவல் துணை கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன்.

நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கிய போதும் தவெக தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தாமல் ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தர வேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரியான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி உட்கார செய்ததால் தகர கொட்டகை உடைந்தும், மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால், பொதுமக்கள் பெரும்பாலோனோருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் பொதுக்கூட்டத்திற்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தியும், அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக அங்கு பல மணி நேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்தனர்.

நீண்ட நேர காத்திருப்பு போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல் நிலையில் சோர்வடைவு ஏற்பட்டது. இந்த இளைவாக மேற்படி சம்பவத்தில் அதிகளவில் மிதிபடுதல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய குற்ற எண்: 855\\\\25US 105. 110. 125(பி), 223 பிஎன்எஸ் ஆக்ட் மற்றும் 3 TNPPDL Act  ன்படி 27ம் தேதி இரவு 9.45 மணிக்கு பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 105 (கொலை அல்லாத குற்றவியல் மனிதப் படுகொலை), 110 (குற்றவியல் மனிதப் படுகொலைக்கு முயற்சித்தல்), 125 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்), மற்றும் 223 (உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை) உள்ளிட்ட சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்கிடையில், தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டம், 1992-இன் பிரிவு 3-ம் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • இந்த சம்பவத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வரப்பட இருக்கும் நிலையில் சிபிஐ விசாரணைக்கு அவர்கள் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் தவெக விஜய் தான்’: முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்..!

இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்த நேரத்தை விட வேண்டுமென்றே 4 மணி நேரம் கரூருக்கு தாமதமாக வந்ததாக தற்போது எப்ஃஐஆரில் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்த போதிலும் அதிக கூட்டத்தை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காக வேண்டும் என்று விஜய் வருவதை அந்த கட்சியின் நிர்வாகிகள் தாமதப்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயில் மற்றும் தாகத்தினால் சோர்வடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை அந்த கட்சி நிர்வாகிகள் ஒழுங்குபடுத்தவில்லை எனவும் சாலை கடைகள், கொட்டகைகள் மற்றும் மரங்களின் மீது அவர்கள் அமர்ந்திருந்த நிலையில் மரம் முறிந்து அதில் இருந்தவர்கள் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் மீதும் விழுந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழல் நிலவியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் – வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கரூர் சோகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறை இறங்கியுள்ளது. அதன்படி, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக நிர்வாகி சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை வதந்தி பரப்பியதாக கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கரூர் நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் புஸ்ஸி ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். விரைவில் அடுத்தடுத்த கைது படலங்களும் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

என்ற கள விசாரணையோடு அடுத்த கட்டத்தை கண்ணுற்றுமேயானால்,,,,

கூட்டத்தை கூட்ட விஜய் செய்த சதியே நெரிசல் ஏற்பட காரணம் என்றும் விவாத பொருளாக பொதுமக்களிடத்திலும், அரசியல் கட்சிகளிடத்திலும், சமூக வலைத்தளத்திலும்   மாறி உள்ளது

கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து விட்டனர். தமிழகம் முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தி விட்ட இந்த சம்பவம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சம்பவ இடத்தில் என்ன நடந்தது, ஏன் நெரிசல் ஏற்பட்டது, கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக விஜய் திட்டமிட்டு நடத்திய சதி செயல்கள் ஆகியவை வெளிவந்துள்ளது. பகல் 12 மணிக்கு கரூரில் விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் காலை 10 மணியில் இருந்தே ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர்.

ஆனால் விஜய் பிரசார இடத்துக்கு வந்த போது இரவு 7.15 மணி. பிரசாரம் நடந்த இடத்துக்கு முன்னதாக திருக்காம்புலியூரில் ரசிகர்கள் சாலையின் இருபுறமும் காத்திருந்தனர். அப்போது விஜய் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்காமல் பரப்புரை வாகனத்தின் உள்ளே சென்று விட்டார். இதனால் சாலையோரம் நின்றவர்கள், விஜயை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இவர்கள் விஜயை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அவரது வாகனத்தின் பின்னால் படையெடுக்க பிரசார இடத்தில் தள்ளுமுள்ளு அதிகரிக்க ஒரு காரணம். விஜய் ஜன்னலோரம் அமர்ந்து கையசைத்திருந்தால், அந்த கூட்டம் அப்படியே திரும்பி இருக்க வாய்ப்புண்டு. எனவே கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக விஜய் திட்டமிட்டே பஸ்சுக்குள் சென்று விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் கூட்டத்தை கூட்ட விஜய் திட்டமிட்டதற்கு இன்னொரு உதாரணம். விஜயின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் 8.45 மணிக்கு தான் சென்னை விமான நிலையத்தில் இருந்தே புறப்பட்டார். எனவே விஜய் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டே இவ்வாறு செய்ததாக சமூகவலை தளங்களில் தகவல் பரவி வருகிறது. அதேபோல் கரூரில் விஜய் வாகனம் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்த போது, ரசிகர்கள் ஒதுங்க வழியில்லை. அவ்வளவு கூட்ட நெரிசல். எல்லா இடத்திலும் விஜயின் பரப்புரை வாகனத்துக்கு அருகிலேயே கன்சோல் ரூம் அமைக்கப்படும். இந்த ரூமில் ஜெனரேட்டர் உள்ளிட்ட சில வசதிகள் இருக்கும். இங்கிருந்து தான் விஜயின் பரப்புரை வாகனத்துக்கு கரன்ட் செல்லும். அதில் இருந்து மைக் இயங்கும்.

பிரசார வாகனத்துக்கு வழிவிட ஏராளமான ரசிகர்கள் கன்சோல் ரூமுக்குள் நுழைந்தனர். இதனால் அந்த ரூமை சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகர சீட்கள் உடைத்து எறியப்பட்டன. இதனால் தான் ஆரம்பத்தில் விஜய் மைக் சிறிது நேரம் வேலை செய்யவில்லை. இதன் பின் மைக்கை சரி செய்தனர். ஆரம்பத்தில் விஜய் பேசிய போது, மைக் வேலை செய்யாததால், அவரது பேச்சை கேட்க பலரும் பரப்புரை வாகனத்தை நோக்கி முண்டியடித்து செல்ல முயன்றனர். அப்போது சிலர் கீழே தவறி விழுந்தனர். கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு மேல் தண்ணீரின்றி, உணவின்றி சோர்வாக இருந்த ரசிகர்கள் மயக்கத்தில் கீழே விழுந்து கால்களில் மிதிபட்டனர். இதனால் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 30க்கும் மேற்பட்டோர் இறந்தே வந்துள்ளனர். விஜய் பேச துவங்கியதுமே பலர் இறந்து விட்டனர்.

இந்த தகவல் அறிந்து பரப்புரை வாகனத்துக்குள் இருந்த ஆதவ் அர்ஜுனா மேலே வந்து பேச்சை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு விஜய் நிலைமைய உணர்ந்து தனது பேச்சை வேகமாக முடித்தார். அப்போது பலர் இறந்து விட்ட செய்தி விஜய்க்கும் தெரியவந்திருக்கிறது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அவர் கிளம்பி விட்டார். விஜய் எப்போதும் தனது ரசிகர்களை நண்பா, நண்பி என அழைப்பார். அந்த ரசிகர்கள் 40 பேர் இறந்ததை அறிந்தும் விஜய் சென்னை சென்றிருக்க வேண்டுமா? களத்தில் இருந்து முதலுதவி சிகிச்சைக்கான வேலைகளை முடுக்கி விட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கடுமையான கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், விஜய் சினிமாவில் ஹீரோ. மக்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் எதிரிகளுடன் சண்டை போட்டு காப்பாற்றுவார். நிஜத்தில் அவ்வாறு செய்ய முடியாது. ரியல் ஹீரோவாக இருந்திருந்தால் பிரசார வாகனத்தில் இருந்து குதித்து நெரிசலில் சிக்கிய ரசிகர்களை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர் எந்த பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக சென்னை சென்று விட்டார். இதை அவரது ரசிகர்கள் உணர வேண்டும். சினிமா மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். சினிமா மோகத்தால் தான் 41 உயிர்கள் பறிபோய் விட்டது என்றனர்.

விஜய் காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் 8.45 மணிக்கு தான் சென்னை விமான நிலையத்தில் இருந்தே புறப்பட்டார்.

விஜய் பரப்புரை வாகனத்தின் ஜன்னலோரம் அமர்ந்து கையசைத்திருந்தால், ரசிகர் கூட்டம் அப்படியே திரும்பி இருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் திட்டமிட்டே பஸ்சுக்குள் சென்று விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக ஒரு நடிகர் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக அன்பு வைக்கிறார்கள். அதுவும் தனக்கு பிடித்த புகழ் பெற்ற உச்ச நடிகர்கள் மீது ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக அன்பை வைத்து அவரை பார்க்க எத்தனை நேரம் காத்திருக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி அன்பின் மிகுதியில் இருக்கும் ரசிகர்கள், அவர்களுக்காக பல முட்டாள்தனங்களையும் செய்கிறார்கள்.

இது 1970களில் இருந்து இன்று வரை தொடர்கிறது. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி கமல், அடுத்தாக விஜய், அஜித் வரை இருக்கிறது.இனி வரும் காலத்திலாவதுஇது மாறினால் சிறப்பாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள சூழலில் நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பின் மிகுதியில் செய்யும் விஷயங்கள் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.

நடிகர் விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பார்த்தால் போது, அவரது பேச்சை கேட்டால் போதும் என்று கூட்டம் கூட்டமாக தவெக நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்திற்கும் பல ஆயிரம் பேர் வந்தார்கள். காலை முதலே விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் தண்ணீர் கிடைக்காமலும், மூச்சுவிடக்கூட முடியாமலும் பரிதவித்து போனார்கள்.

விஜய் வந்துவிட்டு கிளம்பி செல்லும் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் மூச்சுதிணறால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சிலர் மிதப்பட்டும் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதேநேரம் அரசும் குறுகிய இடத்தில் தான் தங்களுக்கு இடம் தந்ததாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகிறார்கள் . மேலும் சதி என்றும் பரப்பி வருகிறார்கள். இதனை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை ஒருபோதும் எடுக்காதீர்கள்..தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல..

இது குறித்தெல்லாம் விசாரிக்க தமிழக அரசு ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளது. அதன்படி ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

உயிர் பலி ஏற்பட்ட இடங்களில், மருத்துவ சிகிச்சைகள் தொடரும் இடங்களில், ஆறுதலுக்கு கூட TVK வை காண முடியவில்லை

உண்மைகளை கண்டடைய வேண்டிய தேவை இருக்கிறது – அரசியல் அறத்திற்காக,,,,

TVK தமிழக அரசின் மீது உமிழும் வார்த்தைகளில் இருந்து துவங்கினாலும் கூட அடிப்படையாக எழும் கேள்வி

1, நீங்கள் ஆண்ட ஆளும் அரசுகளுக்கு எதிராக மாற்றாக மக்கள் நலனுக்கான அரசை அமைக்க அரசியலை தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறி அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளீர்கள் என்று வைத்துக் கொண்டாலும்,  – ஆளும் அரசுக்கு எதிராக என்று தாங்கள் ஆகிவிட்டதாக பிரகடனபடுத்திக் கொண்ட நிலையில், அவர்கள் உங்களுக்கு எதிரான செயல்களை செய்வதாக உங்களின் வாதப்படியே எடுத்துக் கொண்டான்

இதையெல்லாம் தாண்டி நாங்கள் சரியானவர்கள் ஆளுமை மிக்கவர்கள், நிர்வாக மேலாண்மை தெரிந்தவர்கள், தலைமை பண்புமிக்கவர்கள், விவேகமானவர்கள், என்று சொல்லக்கூடிய வகையில் TVK வின் நடவடிக்கைகள் இருந்திருந்தால் – சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்பது அறிவார்ந்த உண்மையாகும்

TVK வெறும் ரசிகர் பட்டாளம் மட்டும் அல்ல – பல ஆண்டுகளுக்கு முன்பே திரு விஜய் அவர்கள் தங்கள் ரசிகர்களை ஸ்தாபனப்படுத்தி உள்ளார் “விஜய் மக்கள் மன்றமாக” மறுத்து விட முடியுமா?

இப்பவும் கிராமம் வரையில் பல கிளைகளாக, ஒன்றிய அமைப்புகளாக மாவட்ட அமைப்புகளாக மாநில அமைப்புகளாக, இதில் பல்வேறு அணிகளாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் TVK வை ஸ்தாபனப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள் என்பது அவர்களின் செயல்பாடுகளில் நாம் அனைவரும் அறிய முடிகிறது. அந்த முறையில் தான் பகுதிவாரியாக தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து உள்ளார்கள் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை அவர்கள் நடவடிக்கையில் இருந்து அனைவரும் கண்டுணறுகிறோம்

கரூர் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டதிலிருந்து, இப்ப பிரச்சாரத்தில் திரட்ட திட்டமிட்டு இருக்கக்கூடிய மானுடர்களின் எண்ணிக்கையை, பிரச்சாரத்தின் நேரத்தை, மற்றும் இப்ப பிரச்சாரத்தில் பங்கேற்கும் மானிடர்களுக்கு குடிநீர், உணவு, நிழல் அமர்வு, மலஜலை ஏற்பாடு, ( குறிப்பாக பெண்களின் நிலை) இவை குறித்து எல்லாம் திட்டமிடல் இல்லாமல் இருப்பதற்கில்லை

அப்படி இது குறித்தெல்லாம் திட்டமிடல் இல்லை என்றால், இவர்கள் நிர்வாக மேலாண்மைக்கு தகுதியற்றவர்கள் என்பதே அறிவார்ந்த விபரமாக இருக்க முடியும் – குறைந்தபட்சம்  பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு கூட உரிய திட்டமிடல் செய்து வழிநடத்த முடியாதவர்களால் எப்படி ஒரு நாட்டை வழிநடத்த முடியும் என்ற கேள்வி அறிவார்ந்த சமூகத்திற்கு நிச்சயமாக எழும்.

இல்லை எங்களுக்கு நிர்வாக மேலாண்மை தெரியும். நாங்கள் தலைமை பண்புக்கு தகுதியானவர்கள் தான் என்றால், இப்படி ஒரு பெரும் திரளை எந்தவிதமான உரிய (குடிநீர் உணவு அமர்வு நிழல் மலஜலை ஏற்பாடு பெண்கள் பாதுகாப்பு)  பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் எந்த உயிர்களைப் பற்றியும் கவலை கொள்ளாமல் திரட்ட வேண்டிய ஆத்திரம் அவசரம் என்ன? நோக்கம் என்ன? அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் எந்த அநீதியும் துணிஞ்சு செய்வதானால், இது அக்கிரமம், அநீதி அல்லவா,,,,

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் சதி நடந்துள்ளதாக சந்தேகிப்பதாக தவெக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தவெகவினர் பலரும் இதில் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்து வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நடந்த துயர நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இதுகுறித்து அவதூறு, சமூக அமைதியை குலைக்கும், வதந்தி வீடியோக்களை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதை தொடர்ந்து வதந்திகளை பரப்புபவர்கள் குறித்த தகவல்களை காவல்துறை சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

தற்போது கரூர் சம்பவம் குறித்து வதந்திகளை வீடியோவாக பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்கள் அமைதியை குலைக்கும் விதமாகவும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில்

அருணா ஜெகதீசன் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதனையடுத்து ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது

அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துகள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர்களை விசாரிக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் விசாரணைக்கு வராவிட்டால் கைது செய்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் மதியழகன் இந்த பிரச்சார நிகழ்ச்சி முடிந்த உடனே அவர் தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு மதியழகன் தான் அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மதியழகனை காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாகத் தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டதாகவும், நேற்று முன்தினம் இரவு முதல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செத்துபோன தொண்டர்கள் வீட்டிற்கு போகமுடியல,
மருத்துவமனையில் உயிருக்கு போராடும் தொண்டர்களை பார்க்க முடியல,
ஆனால் ஆர்எஸ்எஸ் தலைமை குரு ஆடிட்டர் குருமூர்த்தியை மட்டும் மணிகணக்கா பார்க்க முடியுமா?
தான் மட்டும் பிரச்சாரத்தில் பாதுகாப்பாக பேசுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்ட திரு விஜய் அவர்கள், தன் பேச்சைக் கேட்க வரும் பொது மக்களையும் ரசிகர்களையும் கட்சிக்காரர்களையும் பாதுகாப்பது குறித்து சிந்திக்காது போனதும், செயல்படுத்தாது போனதும் ஏன்?
 
ஊருக்கு தாண்டி உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லையா,,,,
இந்த சுயநலவாதியை நம்பி ரசிகர்கள் கூட்டம்… என அறிவுடையோர் கொந்தளிக்கின்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button