ஆளும் வர்க்கத்தின் நிர்வாகவியலும் மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவைகளும்
ஆளும் வர்க்கத்தின் நிர்வாகவியலும் மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவைகளும்

ஆளும் வர்க்கத்தின் நிர்வாகவியலும் மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவைகளும்

நிறுமத்தின் சமூக பொறுப்புணர்வு (CSR- can refer to a Community Service Register or a Corporate Social Responsibility.) கொள்கை
——————————–
07/04/2025 இன்று தமிழக சட்டமன்றத்தில் CSR மாநிலத்துக்குள்ளே பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல்

சட்டம் போட்ட அரசு,
சட்டம் அதன் பால் திட்டம் எதையும் தேசத்தின் குடிமக்கள் தெரிந்து புரிந்து செயல்பட வைப்பதில் முன்னேடுப்பு செய்வதில்லை – ஆம் அதுவும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பாதுகாப்பு என்பது பேருண்மை.
2004 ஆம் ஆண்டு
இந்தியாவில் ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA),
தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு வெளியில் இருந்து – ஆதரவு அளித்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி, பெற்றெடுத்த “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ” ஒரு சிறு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை
கட்டுரைக்குள் வருவோம் :-கம்பெனிகள் சட்டம் 2013-ன்படி, ரூ.500 கோடி நிகர மதிப்புகொண்ட நிறுவனங்கள் அல்லது ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ரூ.5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்கள், தங்களது முந்தைய 3 ஆண்டுகள் லாபத்தின் சராசரியில் 2 சதவீதத்தை சமூக நடவடிக்கைகளுக்கு (Corporate Social Responsibility – CSR) செலவு செய்ய வேண்டும்.

இந்தச் சட்டம் 2014 ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட்டது. சமூக பங்களிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை நிறுவனங்கள் நேரடியாக செலவு செய்யலாம் அல்லது தங்களது சொந்த அறக்கட்டளை மூலமாகவும், லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவும் செலவு செய்யலாம்.
தனி உடமையை நியாயப்படுத்தும் சட்ட தர்மங்கள் இவை யாவும் என்பது பேருண்மை

கட்டுரையின் துவக்கத்தில் நுழைவோம் :-
இருபெரும் தத்துவங்கள் உலகை ஆளுகின்றன
1, மானுடம் மாண்புமிக்க சோசலிச தத்துவம்
2, வலுத்தவன் வாழ்வான் என்ற தனி உடமை தத்துவம்
பிரபஞ்சத்தின் வளங்கள் அனைத்தும் அனைத்து உயிரினங்களுக்கும் உரியது என்பதுதான் உன்னதமான உண்மை
இந்தியா:-
இந்திய விடுதலைப் போராட்டத்தில்
1,செங்கொடி இயக்கமும்
2, இந்திய தேசிய காங்கிரஸும்
3, முஸ்லிம் லீக் இன் நடவடிக்கைகளும் – வரலாறு சொல்லும் பேர் ஆவணங்களாகும்
நேரு கண்ட சோசலிச கனவு
இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம் நேரு. நாட்டு மக்கள் சமத்துவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என அன்றாடம் சிந்தித்தவர்களில் நேரு மாமாவுக்கும் முதன்மையான முக்கியமான, இடம் உண்டு
இந்திய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில், இளவரசராக பிறந்த நேரு, அரசனாக வளர்ந்தவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர், அவர் குறித்து, அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய் எழுதியுள்ளார்.
ஒரு தரப்பினர் நேருவை, ‘ இந்திய ஜனநாயகத்தின் தலைமைச் சிற்பி’ என வர்ணிக்க, மற்றொரு தரப்பினர் ‘இந்தியாவின் ஜனநாயத்திற்கு நேரு காரணம் இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இப்படி இருவிதமான கருத்துகள் நிலவி வரும் நிலையில், நேரு ஹீரோவா? வில்லனா? என்பதற்கு வரலாறு நமக்கு பதிலளிக்கிறது.
சோசலிச நேரு
சிறையன்னையால் சீராட்டி வளர்க்கப்பட்டது நேரு எனும் ஆளுமை. அவர் சிரமங்களையும் சித்ரவதைகளையும் கடந்து செல்லும் நெஞ்சுரத்தை காந்தியிடம் இருந்து பெற்றிருந்தார். காந்தி நாடெங்கும் அலைந்து திரிந்து கண்டுணர்ந்த இந்தியாவை, நேரு புத்தகங்களில் கண்டுணர்ந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியை ஏற்படுத்த சோசலிச கொள்கையைக் கையில் எடுத்தார். சோவியத் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில்மயமாக்கலை கண்டு வியந்ததோடு நிற்காமல், தனது நாட்டிலும் அதைச் செயல்படுத்த விரும்பினார். சுமார் 14 விழுக்காடு படித்தவர்களை மட்டுமே கொண்டிருந்த அன்றைய சுதந்திர இந்தியா, வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. அதை மீட்டெடுக்க பொதுவுடைமைக் கொள்கை பிரதான தேவையாக இருந்ததை உணர்ந்தார்
மற்றவர்கள் போல் சிறை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக நேரு ஒரு போதும் மன்னிப்பு கடிதம் எழுதியது கிடையாது. தனது இளைமைக் காலத்தைச் சிறையில் கழித்த நேரு, ‘சிறையைப் போல ஒரு தவச்சாலை இல்லை’ என சிறை அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். தண்டனையைக் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தியவர் நேரு. 1921ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அவர் சிறையில் இருந்துள்ளார்.
இந்த காலகட்டத்தில், அரசியல், பொருளாதாரம், அறிவியல், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகள் குறித்த 188 புத்தகங்களை நேரு படித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நில சீர்திருத்தத்தின் முக்கியத்துவம், நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பங்கு குறித்தும் அறிந்து கொண்டார்.
1,கலப்பு திருமணத்திற்கு அங்கீகாரம்,
2,சொத்தில் ஆண்களைப் போல் பெண்களுக்கும் சம உரிமை,
3,பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்றவற்றை சட்டத்தின் நிறைவேற்ற விரும்பிய நேரு, சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் உதவியோடு இந்து சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேருவால் மசோதாவை சட்டமாக்க முடியவில்லை. இறுதியில், அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நேருவின் தொடர் முயற்சியால் பல்வேறு இன்னல்களைத் தாண்டி பல திருத்தங்களுடன் இந்த மசோதா சட்டமானது.
இந்திய அரசியலமைப்பில் நேருவின் பங்கு
இந்தியா, பலதரப்பட்ட மக்களை உடைய நாடு. இருநூறு இனங்கள், இரண்டாயிரம் சாதிகளுடன் வேற்றுமையின் ஒற்றுமை காணும் நாடாக அடையாளப்படுத்தப்படும் இந்தியா, சுதந்திரம் அடையும் போது சமத்துவமின்றி பிளவுண்டு கிடந்தது. அப்போது, ‘அனைவரும் பங்களிப்பதே உண்மையான ஜனநாயகம்’ என்பதை மனதில் நிறுத்தி செயல்பட்டார், நேரு.
இந்தியாவை சுதந்திர குடியரசு நாடாக பிரகடனப்படுத்தியதில் நேருவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மக்களாட்சி நிலவும் நாட்டில், அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல், நீதியை வழங்கி கருத்து மற்றும் மதச் சுதந்திரத்தை நிலைநாட்டியவர் நேரு. அனைத்து சமூகத்தினருடைய பாதுகாப்பையும் உறுதி செய்தார்.
கம்யூனிஸ்டுகளின் நிதர்சனமான வலியுறுத்தலால், நேரு நில உடைமையாளர்களுக்கும், செல்வந்தவர்களுக்கும் மட்டுமிருந்த வாக்குரிமையை, 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வாக்குரிமை என மாற்றியும், பல கட்சி முறையை சாத்தியப்படுத்தியும் இந்தியாவை ஜனநாயக நாடாக பிரகடனப்படுத்தினார். இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு தடையாக இருந்த சமூக சமத்துவமின்மை, பிரிவினை வாதம் ஆகியவற்றை துடைத்தெறிய அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்து மதசார்பின்மையை தூக்கிப் பிடித்தார்.
உலக அரசியலில் நேரு
உள்நாட்டுப் போர்களால் உருக்குலைந்திருக்க வேண்டிய இந்தியாவை, இன்னொரு ஆப்பிரிக்க நாடாக மாற விடாமல் அரணாக தடுத்து செயல்பட்டவர், நேரு. இனவாதம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்த அவர், ஆசிய நாடுகளின் ஒற்றுமைக்காகவும், ஆசிய ஆப்பிரிக்கா நாடுகள் இணக்கமாக செயல்படவும் உலகில் அமைதி நிலை பெறவும் குரல் கொடுத்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, ரஷ்யா இரண்டு நாடுகளும் வல்லாதிக்க சக்திகளாக உருவெடுத்தன. உலக நாடுகள் அனைத்தும் இவ்விரண்டு நாடுகளுக்குப் பின் அணிவகுத்தன. ஆனால், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணி பயன்களை அடையும் நோக்கில், நேரு அணி சேரா கொள்கையை வகுத்தார். இதன்மூலம், வளரும் நாடுகளில் முன்னணி நாடாக உருவெடுத்த இந்தியாவுக்கு தனித்துவமான அடையாளம் கிடைத்தது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவை நம்பி சென்ற நேருவுக்கு ( இந்தியாவின் மாண்பை விழுங்க திட்டமிட்டு ) கைவிர்த்தது அமெரிக்கா
இந்தியாவின் வளர்ச்சிக்கு ரஷ்யாவை நம்பி சென்ற நேருவுக்கு, சோசலிச ரஷ்யா நிபந்தனை இல்லாமல் அனைத்து உதவிகளையும் வழங்கி உலக அரங்கில் இந்தியாவின் மாண்பை உயர்த்தி பிடித்தது – இன்று வளர்ந்து நிற்கிறோம் வரலாற்றை மறுதலித்து விட முடியாது 
கட்டுரைக்குள் வருவோம்சோசலிசம் என்பது வெறும் பிரகடனம் மட்டுமல்ல என்பது வாழ்வியல் அனுபவம், சோசலி சமூகத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது அவசியமானதும், முதன்மையானதுமாகும் என்பது வரலாற்று உண்மை.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட (secularism) செக்யூலரிசம் குடியரசு – இந்திய அரசியலமைப்பு மனித உரிமையை உயர்த்திப் பிடித்தாலும், தனி உடமை வர்க்க அரசு என்பது அனைவரும் அறிந்ததே,
தனி உடமை வர்க்க அரசியல், உபரி உழைப்பின் குவியலால் குவிமை படுத்தப்பட்ட செல்வம் – உழைத்த மக்களால் தம் உழைப்பு என்பதை உணராமல் இருக்கும் பொருட்டு
மக்கள் நல, சமூக நல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் தந்திரத்தை, ஆறறிவு உள்ள எவராலும் மறுதலித்து விட முடியாது
அந்த வகையில் தான் CSR can refer to a Community Service Register or a Corporate Social Responsibility. எனப்படும்
கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் (CSR) நான்கு முக்கிய வகைகளான சுற்றுச்சூழல், நெறிமுறை, பரோபகாரம் மற்றும் பொருளாதாரப் பொறுப்புகள் எனப்படுபவைகளை கண்டோமேயானால்
1,சுற்றுச்சூழல் பொறுப்பு:-
சுற்றுச்சூழலில் ஒரு நிறுவனத்தின் எதிர்மறையான தாக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்துகிறது மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தல், வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
2,நெறிமுறை பொறுப்பு:-
மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், நெறிமுறை தொழிலாளர் தரங்களை உறுதி செய்தல் மற்றும் ஊழலைத் தவிர்ப்பது உள்ளிட்ட நியாயமான மற்றும் நேர்மையான வணிக நடைமுறைகளை வலியுறுத்துகிறது.
3,பரோபகார பொறுப்பு:-
தொண்டு நன்கொடைகள், தன்னார்வத் தொண்டு மற்றும் சமூக முன்முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் சமூகத்திற்கு பங்களிப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை உள்ளடக்கியது.
4,பொருளாதாரப் பொறுப்பு:-
நியாயமான விலை நிர்ணயம் மற்றும் பொறுப்பான நிதி நடைமுறைகளை உறுதி செய்யும் அதே வேளையில், பொருளாதாரத்திற்கு பங்களிப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், செல்வத்தை உருவாக்குவதிலும் ஒரு நிறுவனத்தின் பங்கை கவனம் செலுத்துகிறது. தனி உடமையை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள.
(CSR can refer to a Community Service Register or a Corporate Social Responsibility.
Community Service Register
A register kept at every police station in India for non-cognizable offenses
Also known as a daily diary report or diary report
A receipt from a CSR can be used as proof of filing a police complaint and to claim insurance
Corporate Social Responsibility
A term used to describe a company’s efforts to improve society
CSR can improve a company’s public image, brand value, and media coverage
The CSR Act was introduced by the government to encourage private sector participation in social areas)
நிறுமத்தின் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) கொள்கை
1.நிறுவனங்கள் சட்டம், 2013 பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்) குழுவை நியமித்து ஒரு சி.எஸ்.ஆர் கொள்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளுக்கு முந்தைய மூன்று நிதியாண்டுகளில் ஈட்டிய நிறுவனத்தின் சராசரி நிகர லாபத்தில் குறைந்தது 2% செலவிடுவதை உறுதி செய்ய வேண்டும். இதன்படி இக்கொள்கை சமூகப் பொறுப்புக் குழுக் கூட்டத்தின் பரிந்துரையின் பேரில் இயக்குநர்கள் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
2. CSR கமிட்டி, வாரியத்தின் 175-வது கூட்டத்தில் நிர்வாக இயக்குநர், நிதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்குநர் மற்றும் ஒரு சுயேச்சை இயக்குனர் பிரபு கோவிந்தன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
குழு பின்வரும் பணிகளை செய்ய வேண்டும்:
நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் குறிக்கும் சமூகப் பொறுப்புக் கொள்கையை உருவாக்கி இயக்குநர்கள் குழுவுக்குப் பரிந்துரைத்தல்.
சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான விடயங்களில் இயக்குநர்கள் குழுவிற்கு முன்னோக்கு மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல்.
சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட வேண்டிய தொகையைப் பரிந்துரைத்தல்
சி.எஸ்.ஆர் செயல்பாடுகள் நேரடியாகவோ அல்லது எம்.சி.ஏ.வின் சி.எஸ்.ஆர் கொள்கை விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பதிவு செய்யப்பட்ட செயலாக்க முகமைகள் மூலமாகவோ மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல்.
சிஎஸ்ஆர் கொள்கையை அவ்வப்போது கண்காணித்தல், சமூகப் பொறுப்பு செலவினங்களின் செயல்திறனை அவ்வப்போது மதிப்பாய்வு செய்தல்
முன்னேற்றம் மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல் மற்றும் சூழ்நிலை தேவைப்படும்போது தேவை அடிப்படையிலான மாற்றங்களை பரிந்துரைத்தல்.
3. மைய கவனம் பகுதிகள்:
சி.எஸ்.ஆருக்கு பின்வரும் பரந்த முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவை அனைத்தும் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் அட்டவணை 7 இன் கீழ் அவ்வப்போது எம்.சி.ஏ அறிவிப்புகள் மூலம் திருத்தப்பட்ட செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
3.1. சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பை ஊக்குவித்தல்:
இதில் பின்வருவன அடங்கும், ஆனால் பின்வருவனவற்றுடன் மட்டுப்படுத்தப்படவில்லை,
குறிப்பாக கிராமப்புற மற்றும் குடிசைப் பகுதிகளில் நோய்த்தடுப்பு சுகாதார சேவைகள்
கிராமப்புறங்களில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குதல்.
பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், கைவிடப்பட்டோருக்கான சுகாதாரப் பராமரிப்பு பெண் குழந்தைகள், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பாசிட்டிவ் நபர்கள்
சானிட்டரி நாப்கின்கள், ஏழை கல்வி நிறுவனங்கள், அனாதை இல்லங்கள், ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இல்லங்கள், உள்ளூர் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட தடுப்பு மருத்துவ கருவிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை நிரூபித்தல்.
கைவிடப்பட்ட குழந்தைகள் குறிப்பாக சிறுமிகள், அனாதைகள், உடல் ஊனமுற்றோரின் வாழ்க்கையைக் காக்க மளிகைப் பொருட்களை வழங்குதல்.
3.2. கல்வியை ஊக்குவித்தல்,
வகுப்பறைகள், ஆய்வகங்கள், கொட்டகைகள் போன்றவற்றைக் கட்டுவதன் மூலம் கல்விக்கு ஆதரவளித்தல் மற்றும் இல்லங்கள், பள்ளிகள், அனாதை இல்லங்களுக்குத் தேவையான பெஞ்சுகள், கணினிகள் மற்றும் பிற தேவையான உள்கட்டமைப்புகளை (மின்சாரம் தொடர்பான பணிகள் உட்பட) வழங்குதல்.
இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள், பள்ளிப் பைகள், காலணிகள் வழங்குதல்
தொடக்கக் கல்விக்காக பால்வாடிகளை அமைத்தல்.
பெண்கள், முதியவர்கள், வசதி குறைந்த இளைஞர்கள், அனாதைகள் ஆகியோரின் இலக்கு குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு படிப்புகள் அல்லது வாழ்வாதார பயிற்சிக்கு நிதியளித்தல்
3.3. பாலின சமத்துவம் மற்றும் சமூக பொருளாதார அதிகாரமளித்தலை ஊக்குவித்தல்,
பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் திறன் வளர்ப்புத் திட்டம், இல்லங்கள் அமைத்தல், மகளிர் விடுதிகள் அமைத்தல், அனாதைகள், இடைநிற்றல் பெண்கள் அமைத்தல் ஆகியவற்றின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்.
ஏழை மூத்த குடிமக்களுக்காக முதியோர் இல்லங்கள், பகல் நேர பராமரிப்பு மையங்கள் அமைத்தல்
அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்கு வசதிகள் / உபகரணங்கள் வழங்குதல்
3.4. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு:
மரம் நடும் திட்டம், மழை நீர் சேகரிப்பு போன்றவை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுதல்
பூச்சிக்கொல்லிகள், இரசாயனங்கள், செயற்கை வண்ணங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் தீங்கு விளைவிக்கும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், சுகாதார கழிவறைகள் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்
3.5. அரசு நிவாரணம் மற்றும் நல நிதி/ பேரிடர் நிவாரண நிதி போன்றவற்றுக்கான பங்களிப்பு,
நியாயமான முன்மொழிவு கிடைக்காவிட்டால், மாநில அரசின் நிவாரண / நல நிதி மற்றும் பேரிடர் நிவாரண நிதி உட்பட அட்டவணை VII இல் பட்டியலிடப்பட்டுள்ள நிதியில் முதலீடு செய்வது குறித்து குழு பரிசீலிக்கலாம்.
3.6. ஊரக வளர்ச்சித் திட்டங்கள்
புனரமைப்புப் பணிகளை முழுமையான முறையில் மேற்கொள்வதன் மூலம் பின்தங்கிய / பின்தங்கிய மாவட்டங்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் பிற உதவிகளை வழங்குதல்
கைப்பம்புகள், ஆழ்குழாய் கிணறுகள், மழைநீர் சேகரிப்பு வசதி போன்றவற்றை பழுதுபார்த்தல் மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்துதல்.
4. சி.எஸ்.ஆர் திட்டங்களை அமுல்படுத்துதல்
முன்மொழிவு கிடைத்தவுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் / சான்றிதழ்கள், புகைப்படங்கள் போன்றவற்றை சரிபார்ப்பதன் மூலம் உள்நாட்டில் தேவை அடிப்படையிலான அடையாள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
திட்ட முன்மொழிவு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புக் கொள்கைக்குள் அல்லது நிறுவனங்கள் சட்டத்தின் அட்டவணை VII இன் வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
தேவைப்படும் சமூகப் பொறுப்பு ஆதரவு மற்றும் தேவையை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரி அல்லது வேறு எந்த மூத்த அதிகாரியாலும் வருகை மேற்கொள்ளப்படலாம்.
5. ஒருங்கிணைப்பு அலுவலர்
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிதி ஆலோசகர் மற்றும் நிறுவன செயலாளர் அல்லது சி.எஃப்.ஓ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி ஆவார்.
6. சிஎஸ்ஆர் திட்டங்களுக்கு நிதியுதவி,
சமூகப் பொறுப்புக் குழுவின் திட்ட மற்றும் நிதி வரம்புகளின் பரிந்துரையின் பேரில், நிர்வாகம் உள்ளூர் தரப்பினரிடமிருந்து மேற்கோள்கள் / டெண்டர் அல்லது மதிப்பீடுகளை அழைக்க வேண்டும் மற்றும் வழக்கமான வழியில் மதிப்பீடு செய்து வெற்றிகரமான ஏலதாரரைத் தேர்ந்தெடுத்து பணிகளை ஒப்படைக்க வேண்டும்.
முழுப் பணி அல்லது பணியின் ஒரு பகுதி முடிந்ததும், சமூகப் பொறுப்புத் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்ட சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சான்றிதழைப் பெற்ற பிறகு நிதி விடுவிக்கப்படலாம்.
நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் தனி சிஎஸ்ஆர் நிதி பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
செலவினங்களை சமூகப் பொறுப்பு பதிவேட்டில் பதிவு செய்த பிறகும், பயனடையும் நிறுவனத்திடமிருந்து பணி நிறைவு சான்றிதழைப் பெற்ற பிறகும் மட்டுமே பகுதி / முழு கட்டணத்தையும் செலுத்த முடியும்.
பயன்பெறும் நிறுவனம் அவ்வாறு வழங்கப்பட்ட எலும்பு முறிவுகள் / பொருட்களின் ரசீதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
பயன்பெறும் நிறுவனம் எந்த நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட உள்கட்டமைப்பு / பொருளை வழங்குகிறதோ அந்த நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் அதை சரியாக பராமரிக்க வேண்டும்.
தேவையின் அடிப்படையில் அவ்வாறு உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு / வழங்கப்பட்ட பொருட்கள் எந்த நேரத்திலும் ஒருங்கிணைப்பு அலுவலரால் பரிசோதிக்கப்படலாம்.
7. சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடுகள் பற்றி அறிக்கையிடுதல் :
நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகள் குறித்த முன்னேற்ற அறிக்கை, சிஎஸ்ஆர் குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு, நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
8. பொது:
சி.எஸ்.ஆர் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் சி.எஸ்.ஆர் குழுவால் வழங்கப்பட்ட பரந்த அளவுருக்களுக்குள் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளை அங்கீகரிக்க நிர்வாக இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது.
ஒருங்கிணைப்பு அலுவலரால் செய்யப்பட்ட கொள்கையின் எந்தவொரு ஏற்பாடு குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டால், நிர்வாக இயக்குநரின் முடிவே இறுதியானது.
இந்தக் கொள்கையின் கீழ் வராத எந்தவொரு முன்மொழிவும் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது மேற்கொள்ளப்படவோ கூடாது.
9. கொள்கையின் மீது ஆய்வு :-
அனுபவம், சட்டரீதியான தேவைகள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் அரசாங்க வழிகாட்டுதல்களில் மாற்றம் தேவைப்பட்டால், சிஎஸ்ஆர் கொள்கை ஆண்டுதோறும் மறு ஆய்வு செய்யப்படும்.
இப்படி சமூக பங்களிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை நிறுவனங்கள் நேரடியாக செலவு செய்யலாம் அல்லது தங்களது சொந்த அறக்கட்டளை மூலமாகவும், லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவும் செலவு செய்யலாம். வர்க்கச் சுரண்டலை நியாயப்படுத்தும் தர்ம உபகர சிந்தனைகளாகும்
ஒருமுறை, ‘சிஎஸ்ஆர் ஸ்பார்க்’ அமைப்பு சார்பில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை ஆக்கப்பூர்வமாக செலவிடுவது குறித்த கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. அதில், பயிற்சியாளராக கலந்துகொண்ட தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி அறக்கட்டளையின் முன்னாள் தலைமை திட்ட அதிகாரி நிகில் பந்த்திடம், சிஎஸ்ஆர் குறித்த கேள்விகளை முன்வைக்கப்பட்டதில். அந்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிக்குத் தேவையான மனித வளங்களையும், இயற்கை வளங்களையும் இந்த சமுதாயத்தில் இருந்துதான் எடுத்துக் கொள்கின்றன. இதற்கு பிரதிபலனாக சமுதாயத்துக்கு திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைதான் சிஎஸ்ஆர். நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகளை நிறுவனங்கள் விவகாரத் துறை (Corporate affairs) அமைச்சகம் கண்காணிக்கிறது. சமூகத்தையும், பெருநிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக சிஎஸ்ஆர் திட்டம் செயல்பட்டு வருகிறது.
கல்விக்கு ரூ.17,128 கோடி
நீர்நிலைகளை தூர்வாருவது, அரசு பள்ளி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகளுக்கு சிஎஸ்ஆர் நிதி செலவிடப்பட்டு வருகிறது. கல்வி, மருத்துவம், ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திறன் வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு இதுவரை அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 4 நிதி ஆண்டுகளில் சுமார் ரூ.50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கல்விக்கு மட்டும் சுமார் ரூ.17,128 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதிக நிதியை செலவிடும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
ஒரு நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் காஷ்மீர் இளைஞர்களுக்கு கவுன்சலிங் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பிறகு, அப்பகுதியில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந்தன. இவ்வாறு சிஎஸ்ஆர் நிதி மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். HCL, ONGC போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் அமைந்துள்ள இடங்களைத் தாண்டி, நிதி தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து மேம்பாட்டு பணிகளை சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் மேற்கொள்கின்றன.
மத்திய அரசு பரிந்துரை
நிறுவனங்கள் தங்களது லாப மதிப்பில் இருந்து ஒதுக்கும் 2 சதவீத தொகையை முறையாக செலவிடாவிட்டால் அபராதம், சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு அண்மையில் பரிந்துரைத்திருக்கிறது. இந்த பரிந்துரையின்படி நிதியை முறையாக செலவு செய்யாதவர்களுக்குத்தான் பிரச்சினை. சரியான விதத்தில் செலவு செய்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த பரிந்துரையை பெருநிறுவனங்கள் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் எந்த நிறுவனம் எவ்வளவு செலவழித்துள்ளது, எந்த ஆண்டில் எந்த பணிக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசின் https://www.csr.gov.in/master search.php இணையதளத்தில், அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பொதுமக்களே அறிந்துகொள்ளலாம். இதுதவிர மாநிலங்கள் வாரியாக, மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள், செலவினங் களையும் அறிந்துகொள்ளலாம். மேலும், இந்த இணையதளத்தில் பதிவு செய்திருந்தால், அந்த பயனாளிகளிடம் இருந்தும் நிறுவனங்கள் கருத்துகளைக் கேட்க முடியும். இவ்வாறு அனைவருக்கும் தகவல் கிடைப்பதன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளவும், நிறுவனத்தின் தகவல் தரத்தை மேம்படுத்தவும், சிறந்த ஆலோ சனைகளை நிறுவனங்களுக்கு வழங்கவும் முடியும்.
அனைவருக்கும் தகவல் கிடைப்பதன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளவும், நிறுவனத்தின் தகவல் தரத்தை மேம்படுத்தவும், சிறந்த ஆலோ சனைகளை நிறுவனங்களுக்கு வழங்கவும் முடியும். என அவர் கூறினார்.
அனைவரும் அனைத்தையும் அறிய முயற்சிப்போம் இதையும் கூட – எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! என்று தாயுமானவர் பாடிய வரிகள், அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துகின்றன.
அனைத்தையும் ஆராய்ந்தால், அனைவருக்கும் நல்வாழ்வு என்பது- சோசலிச கட்டமைப்பு என்பதுதான் நிதர்சனமான உண்மை என்பதை அனைவரும் அறிவோம்

மெய்ப்பொருள் களத்தில்
கட்டுரையாளர்:-.
ARK,தமிழ்ச்செல்வன் BA(PA).DTJ.,BA,. LL.B.,. Cell :-9445102867,9443441683 Email:-arkdemocracy45@gmail.com. https://helloindiatamil.blogspot.com


